பல்லவி மண்ணில் நல்ல மாந்தருக்கு செய்தி ஒன்று வந்தது தெய்வம் மனித உருவில் வந்தது அநுபல்லவி புதிய வாழ்வு ஆ... மாட்டு குடிலிலிருந்து ஆ... விடுதலை தர விரைந்திங்கு வர அன்பு வாழ்வு பொங்கி எழ சரணம் 1 காவல் காத்து வந்த ஏழை ஆயர்களை வாசல் திறந்து வைத்து வானகமே அழைத்தது - 2 ஏழைகளை பேறு பெற்றோர் - 2 என்று ஆர்த்தெழும் ஒரு அருளொளி தனை பாருலகம் கண்டுவிட - மண்ணில்... சரணம் 2 இரவில் வாழ்ந்தவரை காலைப் பேரொளியின் உதயம் காணச் சொல்லி உன்னதமே அழைத்தது - 2 புதுவுலகம் பிறந்துவிடும் - 2 என்ற உறுதியும் வரும்; உவகையும் தரும் நீதி என்றும் ஆண்டு வரும் - மண்ணில்...
0 Comments:
Post a Comment